2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

'முதுமையின் அனுபவத்தினை உணர்வுடன் போற்றுவோம்' உளநல நாள்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


'முதுமையின் அனுபவத்தினை உணர்வுடன் போற்றுவோம்' என்ற தொனிப்பொருளில் உளநல நாள் இன்று வியாழக்கிழமையும் நடைபெற்றது.

யாழ். கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் யாழ். வலய முகாமைத்துவ உதவிக் கல்விப் பணிப்பாளர் பொ.அருணகிரிநாதர் தலைமையில் யாழ். இந்து மகளிர்; கல்லூரியில் இதற்கான  நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது தலைமை உரையாற்றிய யாழ். வலய முகாமைத்துவ உதவிக் கல்விப் பணிப்பாளர் பொ.அருணகிரிநாதர்,

'மூத்தவர்களை மதிக்கின்ற தன்மை தற்போதைய சமூகத்தினரிடம் இல்லை. அந்த வகையில், பாடசாலை மாணவர்கள் மட்டத்திலிருந்து உளநலச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதன் மூலம் மூத்தவர்களை மதிப்பதற்கான ஆரம்பப்படியாக அமையும்.

அத்துடன், உலகளாவிய ரீதியில் உளநலம் பாதிக்கப்பட்டவர்களின் தொகை அதிகரித்துச் செல்கின்றன. அந்த வகையில், 320 மில்லியன் பேர் உலகளாவிய ரீதியில் உளநலத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறந்த உணவுப்பழக்கம் மற்றும் மூத்தவர்களை மதிக்கும் தன்மை, மாற்றுச் சிந்தனைகளை கைவிடல் போன்ற விடயங்களின் மூலம் உளநலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் பூரணப்படுத்த முடியும் எனக் கூறினார்.

இதற்கான நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக யாழ். வலயக் கல்விப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கோ.வரதராஜமூர்த்தி, உளநல உத்தியோகத்தர் உதயகலா உட்பட ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .