2025 ஜூன் 23, திங்கட்கிழமை

திருட்டுக்களுடன் சம்பந்தபட்டவர் அகப்பட்டார்: மேலும் இருவருக்கு வலை வீச்சு

Kanagaraj   / 2013 நவம்பர் 23 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குள் இடம்பெற்ற பல திருட்டு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீ நிக ஜெயக்கொடி நேற்று வெள்ளிக்கிழமை (22) தெரிவித்தார்.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசி தகவலின் அடிப்படையில் நேற்றுக் காலை 10 மணிக்கு குறிப்பிட்ட நபரின் வீட்டிற்குச் சென்ற பொலிஸார், அவ்வீட்டிலிருந்து ஜந்து நீர் இறைக்கும் மோட்டர்கள, இரண்டு துவிச்சக்கர வண்டி, ஒரு மோட்டார் சைக்கிள், ஊட்டச்சத்துமா போத்தல்கள் உள்ளிட்ட பெருமளவான பொருட்களை மீட்டதுடன், குறித்த நபரையும் கைது செய்தனர்.

மேற்படி நபருடன் இணைந்து திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களைத் தேடும் முயற்சியில் பொலிஸ் குழுவொன்று ஈடுபட்டுள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
குறித்த நபரினை பொலிஸ் விசாரணைக்குட்படுத்திய பின் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள கட்டிடப்பொருட்கள் விற்பனை நிலையங்கள் - 3, அலங்காரப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் - 3, பல்பொருள் விற்பனை நிலையங்கள் - 4, கூட்டுறவு பல்பொருள் விற்பனை நிலையங்கள் - 2 மற்றும் வீடுகள் - 2 ஆகிய இடங்களில் திருட்டுக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .