2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இளைஞர் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 24 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத 4 பேரின் தாக்குதலுக்குள்ளான நிலையில் படுகாயமடைந்துள்ளார்.

பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியினைச் சேர்ந்த சிவகுரு குகனொளி (வயது 27) என்ற இளைஞரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை   காலை விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டுவிட்டு ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோதே இவர் தாக்குதலுக்குள்ளானார்.

மேற்படி இளைஞர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வேளையில்,  அவரைக் காப்பாற்றுவதற்காக  வந்த நண்பர்களை அருகில் வரவேண்டாமென்று தாக்குதல் மேற்கொண்டவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் குறித்த  இளைஞர் மயக்கமடையவே தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .