2025 ஜூன் 23, திங்கட்கிழமை

'பழைய இரும்பு விலைக்கு ரயில் பெட்டிகள் விற்பனை'

Super User   / 2013 நவம்பர் 25 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கெலும் பண்டார

காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் உள்ள பழைய ரயில் பெட்டிகளை பழைய இரும்பு விலைக்கு விற்க அரசாங்கம் தயாராகியுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

பயன்படுத்தப்படாது உள்ள இந்த ரயில் பெட்டிகளை, வட மாகாண சபை தேர்தலில் ஆளும் கட்சி சார்பாக வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்ட ஒருவருக்கு விற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

வட மாகாணத்திலுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவரும் இந்த வியாபாரத்துக்கு உதவியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 2,000 பசுக்களை இறக்குமதி செய்வது பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேசுகின்றார். அதே சமயம் வடக்கு மக்களுக்கு செந்தமான 2,000 மாடுகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .