2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வைத்தியசாலையில் தொலைக்காட்சிபெட்டி திருட்டு

Kogilavani   / 2013 நவம்பர் 26 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

யாழ்.தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியை திருடர்கள் திருடிச்சென்றுள்ளமை தொடர்பில் திங்கட்கிழமை (25) தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (24) இரவு இடம்பெற்றள்ளது.

வைத்தியசாலையில் பூட்டப்படிருந்த பாதுகாப்புக் கமராவினை மூடிவிட்டு இத்திருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸார் கைரேகை அடையாளங்களை பதிவு செய்துள்ளதுடன், பாதுகாப்புக் கமராவை மூடும்போது பதிவாகியிருந்த ஆதார வீடியோவினையும் கொண்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, யாழில் ஆசிரியர் ஒருவர் அணிந்திருந்த நகைகளை பறித்தெடுக்க முற்பட்ட திருடர்கள் அது வெற்றியளிக்காததினால் ஆசிரியினைத் தள்ளி வீழ்த்தியதில் ஆசிரியர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் திங்கட்கிழமை (25) மல்லாகம் வடக்கு கல்லாரை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .