2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சந்தேக நபரின் இரத்த மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 26 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

புத்தூர் கிழக்கில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட அவரது காதலனின் இரத்த மாதிரி பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி மேற்படி இடத்தினைச் சேர்;ந்த அமிர்தலிங்கம் மைதிலி (27) என்ற பெண், அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பாக இம்மாதம் 7ஆம் திகதி அவரது காதலனான ஏ.கிருஸ்ணதீபன் என்ற உழவு இயந்திரச் சாரதி சந்தேகத்தின் பேரில் அச்சுவேலி சிறுகுற்றத்தடுப்புப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

மறுநாள் வெள்ளிக்கிழமை (08) மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் மேற்படி நபரை ஆஜர்ப்படுத்திய வேளை, மேற்படி நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் பஷPர் மொஹமட் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (22) வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரின் இரத்த மாதிரியினை பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்புமாறும், அவரை மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இதற்கிணங்க மேற்படி நபருடைய இரத்த மாதிரி  திங்கட்கிழமை (25) கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அச்சுவேலி சிறு குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .