2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சிவாஜிலிங்கத்தின் வீட்டின் முன்பாக மலர் வளையம்

Super User   / 2013 நவம்பர் 28 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கர்ணன்,எஸ்.கே.பிரசாத்


வட மாகாண சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை மலர் மாலையும் மலர் வளையமும் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில்,

"நான் இன்று அதிகாலை வீட்டின் வெளியில் வந்தபோது எனது வீட்டின் பிரதான நுழைவாயிலின் முன் மலர் வளையமும்; மலர் மாலையும் போடப்பட்டிருந்ததை அவதானித்திருந்தேன். அரச படையினரே தமிழீழத்திற்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு எனது வீட்டு வாசலில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இத்தகைய செயற்பாடுகளால் நாங்கள் அச்சமடைந்து படையினருக்கு அடிப்பணியமாட்டோம். இது தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தொலைபேசியினூடாக முறைப்பாடு செய்துள்ளேன்" என்றார். (படங்கள்- சுமித்தி தங்கராசா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .