2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பெட்டிக் கடையிலிருந்த சுகாதாரச் சீர்கேடான பொருட்கள் கைப்பற்றப்பட்டன

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.மல்லாகம் சந்தியிலிருந்த பெட்டிக்கடையொன்றிலிருந்து சுகாதாரச் சீர்கேடான பொருட்கள் சுகாதாரப் பரிசோதகர்களினால் இன்று சனிக்கிழமை காலை கைப்பற்றப்பட்டுள்ளன.

தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி தலைமையில் சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் வலி.வடக்கு பிரதேச சபையின் சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து மல்லாகச் சந்திப் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையிலேயே மேற்படி பெட்டிக் கடையிலிருந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அக்கடையிலிருந்து அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட நிறச்சாயங்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் உற்பத்தி - காலாவதி திகதி இடப்படாத பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன்.

கைப்பற்றப்பட்ட பொருட்களை ஆய்வுகூடப் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை அறிக்கை வந்தவுடன், மேற்படி விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .