2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நீர்வேலி காளி கோவிலில் திருட்டு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். நீர்வேலி மத்தியில் அமைந்துள்ள காளி கோவிலிலிருந்து  ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் நேற்று சனிக்கிழமை இரவு  திருட்டுப்போயுள்ளன.

மேற்படி கோவிலின் பூசகர் இன்று ஞாயிற்றுக்கிழமை ) காலை பூஜைகளைச் செய்வதற்காக கோவிலுக்குச் சென்றபோது, கோவிலின்  முன் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த குத்து விளக்குகள், மணிகள், தீபங்கள் மற்றும் பித்தளைத்தட்டுகள் உள்ளிட்ட பொருட்களை  திருட்டுப்போயுள்ளமையைக்  கண்டுள்ளார்.

இது தொடர்பில் கோவில் நிர்வாகத்தினரின் கவனத்திற்கு பூசகர் கொண்டுவந்தார். இதனைத்   தொடர்ந்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கோவில் நிர்வாகத்தினர்  முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .