2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் கொலை: ஒருவர் கைது

Kanagaraj   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெஷிசன் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நெடுந்தீவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினருமான டானியல் றெஷிசின் கடந்த 26 ஆம் திகதி புதன்கிழமை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

பிடரிப் பகுதியில் காயமிருந்தமையினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பொழுது, அவரது தலையிலிருந்து துப்பாக்கி ரவை ஒன்று மீட்கப்பட்டது.

தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பிரதேச சபைத் தலைவர் இறப்பதற்கு முன்னர் பயணம் செய்த ஆட்டோவில் இருந்த நபர் தொடர்பில் விசாரணையினை முடக்கி விட்டிருந்தனர்.

இந்நிலையில், நெடுந்தீவினைச் சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்றுறை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



You May Also Like

  Comments - 0

  • Sumathy M Sunday, 01 December 2013 01:49 PM

    அநியாயமான கொலைகளிற்கு முடிவே இல்லையா ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .