2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் உயிரிழப்பு

Kanagaraj   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் யாழ்.போதன வைத்திசாலையில் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியினைச் சேர்ந்த சதீஸ்குமார் மஞ்சுளா (26) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரண்டு மாத கர்ப்பமாகவிருந்த மேற்படி பெண்ணுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைத்து கருத்தடை ஊசி போடப்பட்டதாகவும், இதனால் அவரின் உடல்நிலை மோசமடையவே யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பயனளிக்காமல் மேற்படி பெண் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக கட்டாயக் கருத்தடை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .