2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நாய் விராண்டிய சிறுமி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நாய் விராண்டிய சிறுமியொருவர்  சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

நவாலி தெற்கு மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் துஷக்ஜினி (வயது 10) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இச்சிறுமிக்கு நாய் விராண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  இருப்பினும் நாய் விராண்டியுள்ளதை கவனிக்காது அக்கறையீனமாக இருந்துள்ளனர்.

தொடர்ந்து இச்சிறுமிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படவே நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிக்சைப்பிரிவில் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனாளிக்காமல் இச்சிறுமி உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .