2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வலி. வடக்குப் பிரதேச ஆயுர்வேத பாதுகாப்புச் சபைக்கு புதிய தலைவர்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


வலி. வடக்குப் பிரதேச ஆயுர்வேத பாதுகாப்புச் சபையின் புதிய தலைவராக வைத்திய கலாநிதி எஸ்.சக்திவேல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆயுர்வேத பாதுகாப்புச் சபைக்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான கூட்டம் வலி. வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது.

இந்தப் புதிய நிர்வாக சபையில் செயலாளராக க.ஈஸ்வரன், பொருளாளராக எஸ்.சுந்தரவேல், உபசெயலாளராக உமா மயூதரன், கணக்காய்வாளராக எஸ்.சிறிநாககௌரி ஆகிய ஆயுர்;வேத வைத்தியர்கள்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆயுர்வேத பாதுகாப்புச் சபையின் செயற்பாடுகளாக,

தேசிய வைத்திய முறையினைப் பாதுகாத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல், ஆயுர்வேத வைத்தியத்துறையில் ஈடுபாடுள்ள வைத்தியர்களை பொருளாதாரத் துறைகளிலும் சமூக தராதரத்திலும் மேம்படுத்தல்,  வைத்தியர்கள் பற்றியும் அவர்களது சிகிச்சை முறை பற்றியும் தரவு சேகரித்தல், ஆயுர்வேத வைத்தியத்துறை பற்றி பொதுமக்களுக்கு தெரியப்படுத்தல், இப்பிரதேசத்தில் பயிரிடக்கூடிய மூலிகைகளைப் பற்றிய விபரங்களைச் சேகரித்தல், ஆயுர்வேத கல்வி நடவடிக்கைகளை ஒழுங்கமைத்து அதனை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்தல், தேசிய மருந்து உற்பத்தியினை முறைப்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை ஒழுங்கமைத்தல், நாணாவித வைத்திய முறைகளை அறிந்து அவற்றைப் பாதுகாத்தல் மற்றும் ஆரம்ப சுகாதார நலன் பேணல் போன்றன நடைமுறைப்படுத்தவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .