2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கற்கோவளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பருத்தித்துறையிலுள்ள வீடொன்றில் தரித்து வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் இனந்தெரியாத நபர்களினால் நேற்று  ஞாயிற்றுக்கிழமை இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தரித்து வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளே தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

மதில் பாய்ந்து குறித்த வீட்டு வளவிற்குள்  நுழைந்த இனந்தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளை தீக்கிரையாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .