2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இலுப்பையடியிலுள்ள வியாபார நிலையத்தில் திருட்டு

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்
 
யாழ். இலுப்பையடி சந்தியிலுள்ள வியாபார நிலையத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் இன்று அதிகாலை (07) திருடப்பட்டுள்ளன.
 
இன்று (07) காலை வியாபார நிலையத்தினைத் திறப்பதற்காக உரிமையாளர் சென்ற போது, வியாபார நிலையத்தின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த பால்மா, தொலைபேசி அட்டைகள், சவர்க்கார வகைகள் உள்ளிட்ட பல அத்தியாவசிப் பொருட்கள் திருட்டுப் போயிருந்தமை தெரியவந்தது.
 
இது தொடர்பாக உரிமையாளரினால் யாழ். பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .