2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பருத்தித்துறை நகரசபை மரக்கறி வியாபாரிகள் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு

Kogilavani   / 2014 மார்ச் 02 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


பருத்தித்துறை நகரசபையின் கீழுள்ள பொதுச் சந்தை மரக்கறி வியாபார நடவடிக்கைகளை வேறிடத்திற்கு மாற்றுவது தொடர்பில் பாரம்பறிய கைத்தொழில் மற்றும் சிறுதொhழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சனிக்கிழமை நேரில் சென்று ஆராய்ந்துள்ளார். 

இதன்போது, மரக்கறி வியாபாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், வியாபாரிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.

இதனிடையே, முன்னர் மரக்கறி சந்தை நடைபெற்று வந்த இடத்தைப் பார்வையிட்டதுடன், அங்கு மரக்கறி வியாபாரத்தை மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.

இதன்போது, ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி சிறிரங்கேஸ்வரன், ஈ.பி.டி.பி.யின் கரவெட்டிப் பிரதேச இணைப்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .