2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நான்கு மோட்டார் சைக்கிள்கள் விபத்து: நால்வர் படுகாயம்

Kogilavani   / 2014 மார்ச் 03 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா,  நா.நவரத்தினராசா


யாழ்.கோண்டாவில் மேற்கு உப்புமடப் பிள்ளையார் கோவிலடியில் ஞாயிற்றுக்கிழமை (02)  மாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

தாவடியைச்சேர்ந்த சு.வித்தியாதரன் (26), மா.பகிரதன் (22), சி.சஞ்சீவன் (20) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் மேலும் ஒருவரின் விபரங்களை பெற்றுகொள்ள முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து சுன்னாகம் நோக்கி மிதவேகத்தில் சென்றுகொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் கொழுவுப்பட்டு எதிரே வந்த மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வடமாகாணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலும் இடம்பெற்ற விபத்துக்களில் 22359 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் அதிகமானவர்கள் மோட்டார் சைக்கிள் பயணிகள் என யாழ்.போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த டி சில்வா  கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.பொதுநூலகத்தில்  இடம்பெற்ற விபத்துக்களை குறைப்பது தொடர்பான கலந்துரையாடலில் தெரிவித்திருந்தமை குறிப்படத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .