2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஆசிரியையை தொந்தரவு செய்தவர் விடுதலை

Kogilavani   / 2014 மார்ச் 03 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். அச்சுவேலி பத்தமேனியினைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை கடந்த இரண்டு மாதங்களாக தொலைபேசியில்; தொந்தரவு செய்ததாக கூறப்படும் புத்தூர் நவக்கிரியினைச் சேர்ந்த 28 வயதுடைய நபரை எச்சரிக்கை செய்து நேற்றிரவு (02) விடுதலை செய்ததாக அச்சுவேலி பொலிஸார் திங்கட்கிழiமை (03) தெரிவித்தனர்.

குறித்த நபர் அச்சுவேலி பத்தமேனியினைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை கடந்த இரண்டு மாதங்களாக தொலைபேசியில் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்த நபரின் தொந்தரவு தாங்க முடியாமல் ஆசிரியை குறித்த நபரின் தொலைபேசி இலக்கத்திலிருந்து அழைப்பு வருவதினை தொலைத்தொடர்பு நிறுவனத்தின் உதவியுடன் நிறுத்தியுள்ளார்.

தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்த அந்நபர், நேற்று (02) அதிகாலை 12.30 மணியளவில் குறித்த ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியையின் தந்தை அந்நபரினை பிடித்து அடித்ததுடன், அச்சுவேலிப் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்து, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டனர். 

இதன்போது, இனி எதுவித பிரச்சனையிலும் நான் ஈடுபடமாட்டேன் என குறித்த நபர் கூறியதையடுத்து, குறித்த நபரை தாம் எச்சரித்ததுடன் அறிவுரையும் வழங்கி, அந்நபரை விடுதலை செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .