2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

எதிர்பார்ப்பு ஏமாற்றமளிக்கிறது: அனந்தி

Suganthini Ratnam   / 2014 மார்ச் 06 , பி.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், சுமித்தி தங்கராசா

நாம் அனைவரும் எதிர்பார்த்த விடயங்கள் எதுவும் முன்வைக்கப்படாமல், ஜெனீவா அமர்வு இடம்பெறுவதாக வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

இந்நிலையில்,  தாம் மறுபடியும் சர்வதேசத்தால் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழ். ஊடக அமையத்தில் வியாழக்கிழமை  (06) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு  கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
'
இம்முறையும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான எந்தவொரு போர்க்குற்ற விசாரணைகளும் முன்வைக்கப்படவில்லை. குறிப்பாக இராணுவத்தினரிடம் சரணடைந்தோர் விடயம், காணாமல் போனோர்களின் நிலைமை, அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் எதுவுமே பேசப்படவில்லை. நாம் பெரிதும் சர்வதேசத்தை நம்பியிருந்தோம். ஆனால், இறுதியில் ஏமாற்றமே கிடைத்துள்ளது. இதனால், நாம் பெரிதும் நொந்துபோயுள்ளோம்.

இனியும் இப்படியொரு போர்க்குற்ற சர்வதேச விசாரணை வேண்டுமென்பதை மற்றைய நாடுகள் வலியுறுத்த வேண்டும். மேலும், தற்போது வெளிவருகின்ற மனித புதைகுழி தொடர்பாக சர்வதே விசாரணை தேவையென்பதை நாம் வலியுறுத்தி வருகிறோம். உண்மையில் இவ்வாறான மனித புதைகுழிகள் இன்னமும் இருக்கலாமென்றதொரு அச்சநிலை உள்ளது. தற்போது மன்னார் மனித புதைகுழி தோண்டும் பணிகள் நிறைவுற்ற நிலையில்,  மூங்கிலாறு பகுதியில் மனித புதைகுழி தோண்டப்படுகின்றது.

மேலும், என்னால் முன்வைக்கப்பட்ட ஆட்கொணர்வு மனு விசாரணை சரியாக இடம்பெறவில்லை. எமக்குரிய எந்தப் பிரச்சினைக்கும் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை.

நாம் ஜெனீவா செல்லும்போது இங்கு எந்தவொரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. ஆனால்,  அங்கு சென்ற பின் எனது கருத்துக்களை கூற முட்டுக்கட்டை இடம்பெற்றது.

அதாவது, 'நீங்கள் விடுதலைப் புலிகளின் தளபதியின் மனைவியென்றபடியால் இங்குள்ளவர்கள் நீங்கள் விடுதலைப் புலியெனக் கருதுகின்றனர். ஆகையால், நீங்கள் எந்தவொரு கருத்தும் இங்கு தெரிவிக்க வேண்டாம்' என ஜெனீவாவில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எனக்குக் கூறினார்.

குறித்த கூட்டம் சாதாரணமான கூட்டமென்றால்  சுமந்திரனின் வார்த்தையை மீறி கதைத்திருப்பேன். இது சர்வதேச நாடுகளுடன் இணைந்து நடக்கும் கூட்டம். அதில் அநாகரிகமாக நடக்கக்கூடாது என்று எண்ணி நான் கதைக்கவில்லை.

இதனால், என்னால் அங்கு எதுவும் செய்ய முடியாமல் திரும்பினேன். இந்த விடயம் எனக்கு இலங்கையிலேயே தெரிந்திருந்தால் நான் ஜெனீவாவுக்கு  பயணித்திருக்க மாட்டேன்' என்றார்.

You May Also Like

  Comments - 0

  • jeyananthan Friday, 07 March 2014 04:43 PM

    சுமந்திரனின் வேடம் கலையும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .