2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கசிப்பு வைத்திருந்த மூவர் ஆட்பிணையில் விடுதலை

A.P.Mathan   / 2014 மார்ச் 06 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பளைப் பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தும் கோடாவினை வைத்திருந்த இருவரை தலா 125,000 ரூபா ஆட்பிணையிலும், உற்பத்தி செய்யும் உபகரணத்தினை வைத்திருந்த மேலும் ஒருவருக்கு 100,000 ரூபா ஆட்பிணையிலும் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் உத்தரவிட்டார்.

கிளிநொச்சி - பளைப்பகுதியில் 2015 மில்லிலீற்றர், 1960 மில்லிலீற்றர் கோடாவினை வைத்திருந்த இருவரும், கசிப்பு உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தும் உபகரணத்தினை வைத்திருந்த ஒருவரும் கடந்த வாரம் பளைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து, மேற்படி நபர்களை நேற்று (05) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .