2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வியாபார நிலையத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருட்டு

A.P.Mathan   / 2014 மார்ச் 06 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். தொண்டமனாறு பகுதியிலுள்ள வியாபார நிலையமொன்றில் 20,000 ரூபா பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் நேற்றிரவு (05) திருடப்பட்டுள்ளதாக வியாபார நிலையத்தின் உரிமையாளரான ஞானரத்தினம் நிஷhந்தன் (28) என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை குற்றத்தடுப்புப் பொலிஸார் இன்று (06) தெரிவித்தனர்.

குறித்த நிலையத்தின் உரிமையாளர் இன்று அதிகாலை நிலையத்திற்கு சென்றபோது, நிலையத்தின் முன்கதவு உடைக்கப்பட்டு, அங்கிருந்த பால்மாக்கள், சவர்க்காரங்கள், குளிர்பானங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் திருட்டுப்போயுள்ளதாக நிலையத்தின் உரிமையாளர் முறைப்பாட்டில் தெரிவித்ததாக பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .