2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மணல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 11 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ். சாவகச்சேரி மறவன்புலம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரை அவரின் வீட்டில் செவ்வாய்க்கிழமை (11) கைதுசெய்ததுடன், உழவு இயந்திரமொன்றை கைப்பற்றியதாகவும்  சாவகச்சேரி பொலிஸார்  தெரிவித்தனர்.

இவர் குறித்த பகுதியில் மணல் அகழ்வதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (10)    அவ்விடத்திற்கு  பொலிஸார் வருவதை அவதானித்த சந்தேக நபர்  தப்பிச்சென்றார்.

இந்நிலையில், விசாரணை மேற்கொண்டு பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .