2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கோணாவளைப் பகுதிக்கு மின்விநியோகம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 12 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். மாதகல் கிழக்கிலுள்ள கோணாவளை பகுதிக்கான  மின் விநியோகத்தை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா செவ்வாய்க்கிழமை  (11) ஆரம்பித்து வைத்தார்.

மேற்படி பகுதியில் 2013ஆம் ஆண்டு மீள்குடியேற அனுமதிக்கப்பட்டதிலிருந்து இதுவரையில் சுமார் 75 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளனர்.
இந்நிலையில், இங்குள்ள மக்கள் தங்களுக்கு மின்சார வசதி செய்து தருமாறு  அமைச்சரிடம் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து மின்விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், மின்சார சபை பொறியியலாளர்கள், ஈ.பி.டி.பி.யின் வலிகாமம் பகுதி இணைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .