2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஆண் ஒருவரின் எலும்புக்கூடு மீட்பு

Kogilavani   / 2014 மார்ச் 13 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்

ஏ – 9 வீதி மாங்குளம் சந்திக்கு கிளிநொச்சிக்கும் இடையிலுள்ள காணியிலிருந்து உடல் சிதைவடைந்த ஆண் ஒருவரின் எலும்புக்கூடு புதன்கிழமை (12) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் எலும்புக் கூட்டுக்கு அருகில் கையடக்கத் தொலைபேசியொன்றும், குளிர்பானப் போத்தல் மற்றும் மோட்டார் சைக்கிள் திறப்பு ஆகியன கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினால் மாங்குளம் வடக்கு மாதர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட 1 ஏக்கர் காணியினை மாதர் சங்க உறுப்பினாகள்; துப்பரவாக்கும் பணியில் புதன்கிழமை (12) ஈடுபட்டவேளையிலே மேற்படி எலும்புக்கூடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக இவ்விடயம் தொடர்பாக மாதர் சங்க உறுப்பினர்கள் பிரதேச செயலருக்கும், மாங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து எலும்புக் கூட்டினை நீதவான் முன்னிலையில் மீட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .