2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மூன்று பேரால் இளம் பெண் வல்லுறவு: ஒருவர் கைது

Kogilavani   / 2014 மார்ச் 13 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ற.றஜீவன்

யாழ். துன்னாலை பகுதியிலுள்ள யாக்கரை மயானத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை (07) 19 வயது  பெண்ணொருவரை 3 பேர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் பாலச்சந்திரன் பிரபாகரன் (28) என்ற நபரை புதன்கிழமை (12) மாலை கைதுசெய்துள்ளாக நெல்லியடிப் பொலிஸர் தெரிவித்தனர்.

தென்மராட்சி வரணி இடைக்குறிஞ்சியை சேர்ந்த மேற்படி பெண் அதேயிடத்தினைச் சேர்ந்த இளைஞனுடன் வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை முடித்துவிட்டு திரும்பியுள்ளார்.

இதன்போது வழியில் இவர்களை வழிமறித்த 3 பேர் குறித்த இளைஞனைத் தாக்கிவிட்டு குறித்த யுவதியினை யாக்கரை மயானத்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

பின்னர் மூவரும் சென்றபின்னர் குறித்த இளைஞன் நெல்லியடிப் பொலிஸாரிற்கு தொலைபேசியில் தகவல் வழங்க அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் யுவதியினையும் இளைஞனையும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அத்துடன், பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியர்வர்களின் ஒருவரின் கைப்பையினை (பேர்ஸ்) கைப்பற்றிய பொலிஸார் அதனை வைத்து பாலச்சந்திரன் பிரபாகரன் என்ற நபரை தேடிவந்தனர்.

இந்நிலையில்  மேற்படி நபர் தனது குடும்பத்துடன், வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அப்பகுதி பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் துன்னாலை யாக்கரைப் பகுதியில் வைத்து புதன்கிழமை (12) மாலை கைது செய்யப்பட்டார்.

இந்நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய இருவரையும் தேடி வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .