2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'யாழில் முதலீட்டு வாய்ப்புக்கள் அதிகமாகவிருக்கின்றன'

Kogilavani   / 2014 மார்ச் 13 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-சுமித்தி தங்கராசா


வடமாகாணத்தில் போக்குவரத்துகள் சீரமைக்கப்பட்டுள்ளமையால் கனடாவில் வசிக்கும் வடமாகாண புலம்பெயர் மக்கள் யாழில் அதிகளவு முதலீடு செய்வதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதனை கனடா வாழ் புலம்பெயர் மக்களுக்கு தெரியப்படுத்துவதாக கனடா தூதுவர் ஷெல்லி வைற்றிங்  தெரிவித்ததாக யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் கனடா தூதுவருக்கும் யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (13) இடம்பெற்றது.

இச்சந்திப்புத் தொடர்பாக மாவட்டச் செயலர் கருத்துக் கூறுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'வடமாகாணத்தைச் சேர்ந்த மக்கள் கனடாவில் இருக்கின்றார்கள். இவர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்வதற்கு தடைகள் உள்ளனவா' என தூதுவர் என்னிடம் கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கையில் 'யாழ்ப்பாணத்தில் வசித்த புலம்பெயர் மக்கள் இங்கு முதலீடு செய்வதற்கு எவ்வித தடைகளும் இல்லை. அவர்கள் தமது முதலீடுகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தேன்.

தொடர்ந்து, பாடசாலைகளுக்கு வழங்கப்படும் உணவுத் திட்டம் தொடர்பாக ஆராய்ந்த வேளையில், இத்திட்டத்தின் மூலம் 429 பாடசாலைகள் உள்வாங்கப்பட்டுள்ளது. இதில் 328 பாடசாலைகளில் உணவு சமைப்பதற்கான சமையலறை உண்டு. மிகுதி பாடசாலைக்கு சமையலறை இல்லாத நிலை காணப்படுகிறமையினைச் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆகவே அதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் மீள்குடியமர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டு நிறுத்தப்பட்ட உலர் உணவானது மீண்டும் வழங்;க வேண்டும் என கோரியிருந்தேன். இதற்கு பதிலளித்த கனடா தூதுவர் 'கனடா அரசாங்கத்திற்கு இந்த விடயத்தினை தெரியப்படுத்தி இதற்கான நிதியினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததாக மாவட்டச் செயலர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .