2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

திருட்டு முயற்சி இராணுவத்தினரால் முறியடிப்பு

Kanagaraj   / 2014 மார்ச் 19 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜெகநாதன்

யாழ். திருநெல்வேலி கெற்றப்போல் சந்திப் பகுதியிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருந்த திருட்டு முயற்சி வீதி ரோந்து சென்ற இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (19) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக யாழ்;ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தொலைபேசி விற்பனை நிலையத்தினை இரும்புக் கம்பிகள் கொண்டு உடைத்துக் கொண்டிருந்த திருடர்கள், அவ்விடத்திற்கு ரோந்தில் இராணுவத்தினர் வருவதினை அவதானித்ததினையடுத்து கம்பிகளைப் போட்டுவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

திருடர்களை பிடிப்பதற்காக இராணுவத்தினர் தேடுதல் நடத்திய போதும் திருடர்கள் ஓடி மறைந்துவிட்டனர்.

தொடர்ந்து அயலவர்களின் உதவியுடன் வியாபார நிலையத்தின் உரிமையாளருக்கு தகவல் வழங்கப்பட்டதினையடுத்து, அவ்விடத்திற்கு வந்த உரிமையாளர் இது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .