2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மதிலில் உலர வைத்த புகையிலைகள் திருட்டு

Kanagaraj   / 2014 மார்ச் 19 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

யாழ்.இணுவில் மத்திய கல்லூரியின் வெளி மதிலில் உலரவைக்கப்பட்டிருந்த 1 இலட்சம் ரூபா பெறுமதியாக புகையிலைகள் நூதனமான முறையில் நேற்று (18) இரவு திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் இன்று (19) தெரிவித்தனர்.

புகையிலை செய்கையாளர் ஒருவர் தாம் அறுவடை செய்த புகையிலைகளினை உலர்த்துவதற்காக மேற்படி பாடசாலை மதில்களில் போட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று (18) இரவு திருடர்கள் சிலர் தமது உடமையான புகையிலைகளினை வாகனத்தில் ஏற்றுவது போல் எவ்வித பதட்டமுமின்றி உலரவைக்கப்பட்டிருந்த அனைத்து புகையிலைகளினையும் வாகனமொன்றில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து புகையிலைகளினைக் காயப்போட்ட உரிமையாளர் புகையிலைகளினை காணாது அருகில் விசாரித்த போதே வாகனத்தில் வந்த சிலர் இவ்வாறு புகையிலையினை வாகனத்தில் திருடிச் சென்ற விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.

தொடர்ந்து இது தொடர்பாக உரிமையாளரினால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

யாழ்.மாவட்டத்தில் தற்போது புகையிலை அறுவடைக் காலமாகையினால் புகையிலைச் செய்கையாளர்கள் அறுவடை செய்த புகையிலைகளினை மதில்களில் போட்டு உலர்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .