2025 ஜூன் 28, சனிக்கிழமை

இராணுவப் புலனாய்வாளர்கள் எனக்கூறி வீட்டில் கொள்ளை

A.P.Mathan   / 2014 மார்ச் 22 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, ற.றஜீவன்

இராணுவப் புலனாய்வாளர்கள் எனக்கூறிய சிலர் உரும்பிராய்ப் பகுதியிலுள்ள வீடொன்றில் 35 பவுண் தங்க நகைகளைத் சனிக்கிழமை (22) மாலை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளை நிற கார் ஒன்றில் வந்த குறித்த நபர்கள், தம்மை இராணுவப் புலனாய்வாளர்கள் எனக்கூறி வீட்டினை சோதனையிடுவதாகப் பாசாங்கு செய்து, அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவத்தினால் உரும்பிராய் பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .