2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரம்

Kogilavani   / 2014 மே 23 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் 'தேசிய மின் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரம்' எதிர்வரும் திங்கட்கிழமை (26) தொடக்கம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்;டங்களில் கடைப்பிடிக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிளிநொச்சி முல்லைத்தீவு உதவிப் பணிப்பாளர் துரைஐயா சுபோகரன் வெள்ளிக்கிழமை (23) தெரிவித்தார்.

மேற்படி வாரம் தொடர்ந்து ஜுன் 2 ஆம் திகதி வரையில் கடைப்பிடிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாரத்தில் நிறுவனங்களில் உபயோகப்படுத்தப்பட்டு அகற்றப்பட்ட இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளன.

அந்தவகையில், கிளிநொச்சியிலுள்ள நிறுவனங்கள் தங்கள் இலத்திரனியல் கழிவுகளை எதிர்வரும் புதன்கிழமை (28) கரைச்சிப் பிரதேச சபை வாளாகத்தில் கொண்டு வந்து ஒப்படைக்க முடியும்.

அதேபோல் முல்லைத்தீவிலுள்ள நிறுவனங்கள் தங்கள் இலத்திரனியல் கழிவுகளை எதிர்வரும் வியாழக்கிழமை (29) கரைத்துறைப்பற்று பிரதேச சபை வாளகத்திற்கு கொண்டு வந்து ஒப்படைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

இலத்திரனியல் கழிவுகளை சேகரித்து அகற்றுவதற்கான உரிமம் பெற்ற இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் நடவடிக்கைளுக்கு பொதுமக்கள் உதவுமாறும் அவர் தெரிவித்தார்.

கழிவு முகாமைத்துவம் தொடர்பான அரச கொள்கைகளை சிறப்பாக செயற்படுத்தவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவுமென தேசிய மின் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரம் கடைப்பிடிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X