2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் படுகாயம்

Kanagaraj   / 2014 மே 25 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ய.கி.பகவான்

யாழ். சாவகச்சேரி, டச்சு வீதியில் சனிக்கிழமை(24) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நபரொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த போது குறித்த நபர் கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவரது தலையில் ஏறியதால், குறித்த நபர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மட்டுவிலினைச் சேர்ந்த சிவராசா சிவாஸ்கரன் (22) என்பவரே விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த நபரின் தலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .