2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இளைஞர் மீது கும்பல் தாக்குதல்

Kogilavani   / 2014 மே 26 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான் 

யாழ்.மீசாலைப் பகுதியில் வீதியினால் சென்றுகொண்டிருந்த இளைஞன் மீது கும்பல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (25) மாலை மேற்கொண்ட தாக்குதலில் குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

மீசாலை வடக்கினைச் சேர்ந்த வீரசிங்கம் துலக்சன் (24) என்பவரே படுகாயமடைந்தார்.

படுகாமயடைந்த நிலையில் வீதியோரத்தில் கிடந்த இளைஞன் அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக   பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X