2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மீனவர்களை அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தல்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 04 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்.மாவட்டத்தில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு செவ்வாய்க்கிழமை (04) அறிவித்தல் விடுத்துள்ளது.

யாழ்.மாவட்டத்தில் அதிகூடிய காற்றுடன் மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமிருப்பதால் மீனவர்கள் அவதானம் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அறிவுறுத்தல்களை மீனவர் சமாசங்கள் ஊடாக விடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .