2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இருவரில் ஒருவருக்கு தவராசா சவால்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 06 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண சபையில் கடந்த ஒருவருடகாலமாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அல்லது வட மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஆகிய இருவரில் ஒருவருக்கு வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா சவால் விடுத்துள்ளார்.

வடமாகாண சபை நிதி தொடர்பாக அறிவிலித்தனமான விமர்சனங்களை அரசாங்கம் மற்றும் மாகாண சபை எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருவதாக மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் புதன்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறியதற்கே வடக்கு மாகாண சபை எதிர்க் கட்சித் தலைவர் சி. தவராசா இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண சபை பதவியேற்று ஒரு வருட காலம் முடிவுற்ற நிலையில், இது வரை மாகாண சபை மக்களுக்கு என்னத்தை செய்துள்ளது என்பது தொடர்பாக மாகாண சபையின் முதலமைச்சரோ, அமைச்சர்களோ அல்லது அவைத் தலைவரோ தொலைக்காட்சியின் முன்பு அல்லது மக்கள் அரங்கொன்றில் நேரடி விவாதத்துக்கு வருமாறு எதிர்க் கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பத்திரிகையாளர்களை அழைத்து ஒரு பக்கசார்பாக பிழையான கருத்துக்களை வெளியிடாமல் நேரடியாக மக்கள் மன்றின் முன் இது தொடர்பான விவாதத்திற்கு வருமாறு வடமாகாண முதலமைச்சரையும் அமைச்சர்களையும் அவைத் தலைவரையும் அழைப்பு விடுவதாக அவர் தனது அழைப்பில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் வட மாகாண சபையின் நிர்வாகத்திற்கு பொறுப்பானவர்கள் முதலமைச்சரும், அமைச்சர்களுமே. அவர்களே நிதிச் செலவீனம் தொடர்பான விடயங்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.

அவைத் தலைவர் சபை நடவடிக்கைகளுக்கே பொறுப்பானவர். இருந்தும் இவர்களில் ஒருவரை நேரடி விவாதத்திற்கு தான் மீண்டும் அழைப்பதாக அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .