Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வேலணை பகுதியில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை 30 நாட்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க உத்தரவிட்டார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (01) இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்தில், வேலணை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு, களவு மற்றும் சட்டவிரோத மதுவிற்பனை என்பன அதிகரித்து காணப்படுவதாகவும் அவற்றை கட்டுப்படுத்த வேலணை பகுதிக்கு பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்க வேண்டும் என வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரிடம் வேலணை பிரதேச சபை தவிசாளரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர், வேலணை பகுதிக்கு என பொலிஸ் காவலரண் தேவையில்லை. வேலணை பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்களை ஊர்காவற்துறை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியும்.
இரவு வேளைகளில் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனத்தில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அதன்மூலம் அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று தெரிவித்தார்.
மேலும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விரைவான விசாரணை நடத்தப்பட்டு அவர்களை 30 நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்த வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் வேலணை பகுதியில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஊர்காவற்துறை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025