2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மூதாட்டிக்கு அபராதம்

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் சட்ட விரோத மின்சாரம் பயன்படுத்திய மூதாட்டிக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி திருநகர்ப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பயன்படுத்தி வந்த மூதாட்டி ஒருவருக்கு எதிராக மின்சார சபையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

குறித்த மூதாட்டியை புதன்கிழமை (01) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் எம்.ஐ.வகாப்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் நிலுவையாகவுள்ள 6 ஆயிரம் ரூபாய் மின் கட்டணத்தை மின்சார சபையில் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .