2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பதினெட்டாம் போரில் விபத்து: ஒருவர் காயம்

Thipaan   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

ஏ-9 வீதியில் பதினெட்டாம் போர் பகுதியில் சனிக்கிழமை (04) நண்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த ஒருவர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக   மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மாத்தளையிலிருந்து கிளிநொச்சிக்கு புடவை வியாபாரத்துக்கு சென்று கொண்டிருந்த  படி ரக வாகனம் ஏ-9 வீதியின் பதினெட்டாம் போர் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் மாத்தளையை சேர்ந்த மொஹமட் இஸ்மைல் என்பவர் காயமடைந்து  கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .