Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Kogilavani / 2015 மே 06 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் கிழக்குப் பகுதி வீதியை இராணுவத்தினரிடமிருந்து பெற்று ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய காரியாலய திறப்பு விழா புதன்கிழமை (06) நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக வருகைதந்த அமைச்சரை, நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆலயத்துக்கு அழைத்துச் சென்று, இராணுவத்தினரின் பாவனையிலுள்ள ஆலயத்தின் கிழக்கு வீதியை காண்பித்தார்.
இதன்போது, ஆலயத்தின் முக்கியம் வாய்ந்த வீதியை இராணுவத்தினரிடமிருந்து பெற்றுத்தருமாறு ஆலய நிர்வாகம் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தது.
இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் இதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
7 hours ago