2025 ஜூலை 09, புதன்கிழமை

வெடிமருந்து வைத்திருந்தவர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2015 மே 07 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி மேற்கு பகுதியில் தடை செய்யப்பட்ட இறப்பர் வெடிமருந்துகளை வைத்திருந்த இருவருக்கு தலா 2,500 ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் கருப்பையா ஜீவராணி புதன்கிழமை (06) தீர்ப்பளித்தார்.

கல்லுடைக்கும் தொழிலாளியான இந்த இருவரும் 9 கிலோ 416 கிராம் இறப்பர் வெடிமருந்துகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட இவர்களின், வழக்கு புதன்கிழமை (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அச்சுவேலி பொலிஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இருவரும் குற்றங்களை ஏற்றுக்கொண்டதையடுத்து நீதவான் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .