2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Thipaan   / 2015 ஜூன் 06 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன், கி.பகவான்

யாழ். சாவகச்சேரி இல்லாரையிலிருந்து எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் சனிக்கிழமை (06) மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சதாசிவம் சபாரட்ணம் (வயது 55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறியவர் சனிக்கிழமை (06) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X