Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 12 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ற.றஜீவன்
யாழ்ப்பாணம், குடத்தனை கிழக்குப் பகுதியில் வியாழக்கிழமை (11) கிணற்றுக்குள் வீழ்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தார். ஞானசிகாமணி பிரபாளினி (வயது 30) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டுக்காரர்கள் வெளியில் சென்றிருந்த நிலையில் பெண் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். வீட்டுக்காரர்கள் திரும்பிவந்து பார்த்த போது பெண் வீட்டில் இருக்கவில்லை. பல இடங்களில் தேடி கிணற்றுக்குள் பார்த்த போது, அவரது சடலம் காணப்பட்டது.
சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago