2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

210 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றிதழ்கள்

Kogilavani   / 2014 மார்ச் 18 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த 210 மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் நாகலிங்கம் வேதநாயகம் செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்தார்.

கடந்த 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்ற, மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவையிலே மேற்படி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மருத்துவச் சான்றிதழ்களினை கொழும்பு மோட்டார் போக்குவரத்து திணைக்கள பரிசோதகர்கள், நுகேகொடயிலுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்திற்காக மருத்துவ சான்றிதழ் வழங்கும் மருத்துவ அதிகாரிகள் ஆகியோர் இணைந்து வழங்கியுள்ளதாகக் கூறினார்.

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் இந்த வேலைத்திட்டத்தினை மேற்கொண்டதாக மாவட்டச் செயலர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .