2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

53 இலட்சம் ரூபா செலவில் சுயகற்றல் மண்டபம் திறப்பு

Kogilavani   / 2014 மார்ச் 18 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் துரித மீட்சித் திட்டத்தில் 53 இலட்சம் ரூபா செலவில் ஊர்காவற்றுறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சுயகற்றல் அபிவிருத்தி செயற்பாட்டு மண்டபத்தை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா திங்கட்கிழமை (17) திறந்து வைத்தார்.

அத்துடன், குறித்த கட்டிடத்தினை மேலும் அழகுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை, கட்டிடத்திற்கு தேவையான தளபாடங்கள் தொடர்பில் தமக்கு திட்டங்களை சமர்ப்பிக்குமாறும் சம்பந்தப்பட்டவர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், அவ்வளாகத்தில் விளையாட்டு மைதானம், சிறுவர்களுக்கான விளையாட்டு முற்றம் உள்ளிட்ட அபிவிருத்தி மேம்பாட்டு செயற்றிட்டங்கள் தொடர்பில் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்ட அமைச்சர், விசேட நிதியொதுக்கீட்டிற்கு அமைவாக 18 இலட்சம் ரூபா பெறுமதியான செயற்றிட்டங்களை செயற்படுத்துமாறும் தெரிவித்தார்.

அத்துடன், அங்குள்ள உபகரணங்களை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு உத்தியோகத்தரை நியமிக்குமாறும் அமைச்சர் அவர்களால் துறைசார்ந்தோருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இத்திறப்பு விழா நிகழ்வில் ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின், ஊர்காவற்துறை பிரதேச செயலர் திருமதி.எழிலரசி அன்ரன் யோகநாயகம், ஊர்காவற்துறை பிரதேச சபைத் தவிசாளர் மருதஐயனார் ஜெயகாந்தன், வேலணைப் பிரதேச சபைத் தவிசாளர் போல் சிவராசா, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி.குகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .