2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆலயத்திற்கு சென்ற இளைஞர் பலி

Janu   / 2023 ஜூன் 06 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் மின்கம்பத்தில் மோதி  உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி  அம்மன்  ஆலயத்திற்கு சென்று விட்டு  வடமராட்சி கிழக்கு  குடத்தனை பகுதியில் உள்ள  தனது வீடு நோக்கி  பயணித்த இளைஞரே  மின் கம்பத்துடன் மோதி  உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம்  இன்று அதிகாலை  3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குடத்தனை பகுதியைச் சேர்ந்த நிறோஜன் என்ற 31 வயதான  இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் உடல் கூற்று சோதனைக்காக   பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .