2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஆலயத்திற்கு மேல் குடைசாய்ந்த அரசமரம்

Freelancer   / 2023 நவம்பர் 14 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

யாழில் உள்ள ஆலயம் ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததால் குறித்த ஆலயம் சேதமடைந்துள்ளதாக யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

வலிகாமம் மேற்கு, சங்கானை - வட்டு மேற்கில் (ஜே/167) பாரிய அரசமரம் ஒன்று திங்கட்கிழமை (13) இரவு  தொடர்ந்து பெய்த மழையால் குடைசாய்ந்து விழுந்துள்ளது.

இப்பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்துக்கு அருகில் இருந்த மரமே இவ்வாறு விழுந்துள்ளது. இதனால் ஆலயத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .