2025 ஜூலை 28, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் 19 பேருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து  மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 10ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 19 பேரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 06ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதவான் உருத்திரேஸ்வரன் விஜயராணி இன்று வெள்ளிக்கிழமை (23) உத்தரவிட்டார்.

தமிழ்நாடு, நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 19 பேரும் 02 விசைப்படகுகளுடன்  பருத்தித்துறை கடற்பரப்பை அண்மித்த இலங்கை கடற்பரப்பில் கடந்த 10ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X