2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இராணுவ சோதனைச் சாவடியில் கஞ்சாவுடன் இளைஞன் கைது

Niroshini   / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

 

அச்சுவேலி பிரதான வீதியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து, கஞ்சாவுடன் 28 வயது இளைஞன் ஒருவர், இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி - தோப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞனே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.

சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர், சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த குறித்த இளைஞனை விசாரணை மேற்கொண்டு போதே, அவரது உடைமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு, அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .