Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Niroshini / 2021 ஒக்டோபர் 19 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
வேலணை - துறையூர் பகுதியில், நேற்று (18) மாலை, கடற்படை புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயங்களுக்கு உள்ளான மீனவர் ஒருவர்; யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பூநகரி - வெட்டுகாடு, கோவிலடி, வத்தியார் பகுதியைச் சேர்ந்த சுப்பையா வசந்தன் (வயது 26) என்ற இளைஞனே, இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி உள்ளதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், கடற்படையினர் தங்களைத் தாக்க வருவதை உணர்ந்துகொண்ட ஏனைய 2 மீனவர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த 3 மீனவர்களும், பூநகரி பகுதியில் இருந்து வேலணை பகுதிக்கு படகு மூலம் வந்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் வந்த படகை மறித்து சோதனையிட்ட கடற்படை புலனாய்வுப பிரிவினர், 'நீங்கள் கஞ்சா கடத்தவா வந்துள்ளீர்கள்' எனக் கூறி, மீனவர்களை கடுமையாகத்; தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
59 minute ago
2 hours ago