2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கடலுக்குள் கார் பாய்ந்த விபத்து

Editorial   / 2023 ஏப்ரல் 17 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

வேக கட்டுப்பாட்டை இழந்த காரொன்று கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும்,  வாகனத்தின் சாரதி மது போதையில் வாகனம் செலுத்தியதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான காரை கனரக வாகனத்தின் உதவியுடன் கடலுக்குள் இருந்து மீட்கும் நடவடிக்கையினை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (16) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 அவருக்கு எதிராக போக்குவரத்து சட்ட விதிமுறைகளுக்கு அமைய வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X