2025 ஜூன் 23, திங்கட்கிழமை

காணி அளவிட வந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்

Niroshini   / 2021 நவம்பர் 17 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில், கடற்படையினரின் தேவைக்காக,  தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக, இன்று (17) முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள், மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளன.

மாதகல் - ஜே150 கிராம சேவையாளர் பிரிவில், தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அக்காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள்,  இன்றைய தினம் (17) முன்னெடுக்கப்படவிருந்தன.

இதன் போது, காணிகளை அளவீடு செய்வதற்காக நிலஅளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் வருகை தந்த போது, காணி உரிமையாளர்கள் , அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள், கடும் எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து , காணி அளவீட்டுப் பணிக்கு வந்தவர்கள் திரும்பி சென்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .